Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பேருந்து நிலையம் அருகே பாரத பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறும் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி தலைமை தாங்கினார் இந்த பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி டி சோலையப்பன் ஜி. மாவட்ட பொது செயலாளர் போத்திராஜ் பட்டியலின மாவட்ட துணை தலைவர் கதிரேசன் மற்றும் ஜி.முத்துக்குமார், கா.செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்
முன்னிலையில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய அரசு 9 ஆண்டுகளில் செய்த சாதனைகள் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் நடைபெற்றது.